Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பாரிமுனையில் மல்டிமாடல் வணிக மையம் .. பிராட்வேயில் தொடங்கிய பணி.. என்னென்ன வசதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட 'பல்நோக்கு ஒருங்கிணைந்த பஸ் வளாகம்' (மல்டி மாடல் வளாகம்) அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது. அப்போது பழுதான நிலையில் இருந்த குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பஸ் நிலையமும், வணிக வளாகமும் கட்டலாம் என தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை வழங்கியது. அதன்படியே ரூ.823 கோடி ரூபாயில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பஸ் வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

சென்னையில் ஒரு காலத்தில் அனைத்து வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையமாக இருந்தது பாரிமுனை. அண்ணா சாலை மொத்தமும் ஸ்தம்பிக்கும். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கோயம்பேட்டிற்கு பேருந்துநிலையம் மாற்றப்பட்டது.

parrys corner Soil testing work begins for construction of integrated bus complex in Broadway

அதன்பிறகு தற்போது கோயம்பேட்டிலும் பேருந்து நிலையம் இல்லை.. அங்குமே நெரிசல் ஏற்பட்டதால், கிளாம்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லையில் இருந்தே 15 கிமீ தள்ளி தான் கிளாம்பாக்கம் அமைந்துள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது பாரிமுனையில் இருந்து 30 கிமீ தூரம் தள்ளி உள்ளது. பாரிமுனை பேருந்து நிலையம் புறநகர் பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.

அரசின் திட்டம் என்ன

இந்நிலையில் சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட 'பல்நோக்கு ஒருங்கிணைந்த பஸ் வளாகம்' (மல்டி மாடல் வளாகம்) உருவாக்க அரசு திட்டமிட்டது. இதன் அருகில் பழுதடைந்துள்ள குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பஸ் நிலையமும், வணிக வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை தந்தது.

823 கோடியில் ரெடியாகிறது

இதையடுத்து சென்னை மாநகராட்சி மூலம் பாரிமுனையில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான பஸ் நிலையம் அமைக்க ரூ.823 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டது.. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்ள உள்ளன. தற்போது இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பாரிமுனை மல்டிமாடல் வணிக மையம்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, சென்னை பாரிமுனையில் 27 மாடி மைய கோபுரத்துடன் மல்டிமாடல் வணிக மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் 4.42 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. பாரிமுனையின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள விற்பனையாளர்களுக்கு 200-க்கும் மேற்பட்டேருக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

என்னென்ன வசதிகள்

அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டவுடன், மெட்ரோ நிறுவனம் ரூ.823 கோடி செலவில் மல்டி மாடல் வளாகத்தை கட்டுவதற்கான கட்டுமானத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் 2 அடித்தளங்களுடன் 10 தளங்களும், பஸ் நிலையத்திற்கு 2 தளங்களும், வணிக நிறுவனங்களுக்கு 6 தளங்களும் இருக்கும். இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், ஓய்வறைகள், டிக்கெட் பகுதி, காத்திருப்பு பகுதி மற்றும் பிற வசதிகளும் . சுரங்கப்பாதைகளுடன் ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் குறளகத்துடன் இணைக்க்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணி தொடங்குகிறது. தற்போது முதற்கட்டமாக மண் பரிசோதனை தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+