"ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி".. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள், திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2012 முதல் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் இவர்களுக்கு தொகுப்பூதியமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 8 ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பகுதி நேர ஆசிரியர்கள் திடீரென டிபிஐ வளாகத்துக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் போராட்டத்தை ஒட்டி ஏற்கனவே போலீசார், அவர்களை கைது செய்வதற்காக காவல்துறை வாகனங்களில் வந்திருந்தனர். அதன்படி, சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர். இந்த போராட்டத்தின் போது ஒருசில ஆசிரியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபடும் பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , "பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அந்த கோரிக்கைகள் தமிழக முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும். விரைவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பகுதி நேர ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஊதிய உயர்வு, வயது வரம்பு தளர்வு, பணிமாறுதல், கலந்தாய்வு உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்." என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications