Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி".. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள், திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2012 முதல் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் இவர்களுக்கு தொகுப்பூதியமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Part-Time Teachers Protest Minister Assures Good News Soon

கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 8 ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பகுதி நேர ஆசிரியர்கள் திடீரென டிபிஐ வளாகத்துக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களின் போராட்டத்தை ஒட்டி ஏற்கனவே போலீசார், அவர்களை கைது செய்வதற்காக காவல்துறை வாகனங்களில் வந்திருந்தனர். அதன்படி, சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர். இந்த போராட்டத்தின் போது ஒருசில ஆசிரியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபடும் பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , "பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அந்த கோரிக்கைகள் தமிழக முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும். விரைவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பகுதி நேர ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஊதிய உயர்வு, வயது வரம்பு தளர்வு, பணிமாறுதல், கலந்தாய்வு உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்." என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+