பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அனுமதி.. மூளையில் அறுவை சிகிச்சை
சென்னை: பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக, அவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரைத் தவறாமல் காணலாம். பட்டிமன்றங்களில் இவரது பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம்.

கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படித்துள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பாரதி பாஸ்கர் இன்று காலை சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

52 வயதான பாரதி பாஸ்கருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காகச் சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "அழகிய தமிழில் பேசும் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பட்டிமன்ற ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications