பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணமாம்..பழிபோடும் பாஜக எச்.ராஜா
சென்னை: தமிழகத்தில் பாஜகவினர் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவை நகர் பகுதி மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய புறநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. ஒரே நாளில் ஏழு சம்பவங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கோவையில் தீவிர சோதனை
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை , கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையைத் தொடர்ந்து சென்னை, சத்தியமங்கலம், திண்டுக்கல்லிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மர்மங்கள் நீடிப்பு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களைப் போல எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் நீதிமன்றங்களில் சரணடையவும் இல்லை. இதனால் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களின் பின்னணி தொடர்பான மர்மங்கள் நீடித்து வருகிறது.

பழிபோடும் எச்.ராஜா
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மீது பழியை போடும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கர வாதம் தலைவிரித்து ஆடுகிறது என குறிப்பிட்டுள்ளார் எச்.ராஜா. அவரது இந்த கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ரெய்டு
இந்துக்கள்- சூத்திரர்கள்- விபச்சாரி மகன் என திமுக மூத்த தலைவர் ஆ.ராசா பேசியதை பாஜகவினர் கண்டித்தனர். ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் கோவை, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் இச்சோதனைகளில் இணைந்து கொண்டனர். அத்துடன் அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிப்பு
இந்நிலையில் பாஜகவினர் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, கோவை ஒப்பணக்கார வீதியில் மாருதி செலக்சன்ஸ் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஆகியவற்றில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சிலர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்ததால் போலீசார் அவர்களை விடுவித்தனர்.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications