10 நாட்களாக உயரவில்லை.. நெருங்கும் 5 மாநில தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை!
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து 10 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. கடந்த ஜனவரியில் இருந்து பிரென்ட் க்ருட் எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. பிரென்ட் க்ருட் எண்ணெயின் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 69.36 டாலரை தொட்டது. 2.62 டாலர் இது உயர்ந்தது.
இதன்பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் தொடர்ந்து 10 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தினமும் சர்வதேச நிலவரத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் டீசல் விலையை தீர்மானம் செய்கிறது. ஆனால் தற்போது விலையில் எந்த மாற்றமும் செய்ய கூடாது என்று அரசு மூலம் இந்த நிறுவனங்களுக்கு கோரிக்கைகள் சென்றுள்ளதாக தகவல்கள் வருகிறது.
இதனால் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 11 பைசா உயர்ந்து 87.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைதான் இதுவரை விற்கப்பட்டதிலேயே அதிக விலை ஆகும்.