நீங்க எதிர்பார்த்த மாதிரியே.. தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம்
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், பெட்ரோல் விலை கிடுகிடுவென உயரும் என்ற பேச்சு இருந்தது. கச்சா எண்ணை விலை கணிசமாக உயர்ந்த பிறகும், தேர்தலுக்காகத்தான் விலை உயர்வு தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது.
மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு விலை ஏற்றம் உள்ளது. சென்னையில் இன்று, நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 9 காசுகள் அதிகரித்து விற்பனையாகி வருகிறது.
கமல்ஹாசன் உருவபொம்மைக்கு பாடை கட்டி எரிக்க முயன்று "பெரும்" போராட்டம்.. கைதான வெறும் 4 பேர்!
பாஜக கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், அப்போது பிற கட்சிகள் ஆதரவை நாட வேண்டி வரும். எனவே, அதுவரை, பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பதே நல்லது என அரசு நினைப்பதாகவும் எனவேதான் பெரிய அளவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றும் கூறப்படுகிறது.