பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை.. கூட்டணியில் இணையும் புது கட்சி.. அதிரடிக்கும் ரகசிய சந்திப்பு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்கிற வியூகத்துடன் அதிமுக பாஜக கூட்டணி களமிறங்கியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி தினகரனை கூட்டணியில் இணைத்துள்ளனர். கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரும், சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வரவுள்ளார். கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக சில முக்கிய சந்திப்புகளை அவர் நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி
திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா தமிழ்நாடு அரசியலை நேரடியாக கண்காணித்து வருகிறார். மற்றொரு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த வாரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற்றது. இது அந்தக் கூட்டணிக்கு சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது. கூட்டணி, வியூகங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பியூஷ் கோயல் ஆய்வு செய்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்டோர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பியூஷ் கோயல் சென்னை வருகை
ஆனால் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நோ சொல்லிவிட்டார். தேமுதிக மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் பிடி கொடுக்காமல் இருக்கிறார்கள். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வரவுள்ளார். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
இன்று காலை பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் மற்றும் மக்கள் குறை தீர்ப்புப் பெட்டி சுற்றுப் பயணம் ஆகியவற்றை பியூஷ் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். அவர்களுடன் பியூஷ் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
பாஜக நம்பிக்கை
முக்கியமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பியூஷ் கோயல் முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு கட்சி நிர்வாகிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். பியூஷின் இன்றைய விசிட்டிற்கு பிறகு அந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் அதிகாரபூர்வமாக இணையலாம் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications