மோடி- ஜின் பிங் சந்திப்பு.. மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்? வெளியுறவுத்துறை விளக்கம்
Recommended Video
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில்தான் சந்திப்பு நடத்த வேண்டும் என்று தேர்ந்தெடுத்தது சீன அதிபர் ஜின்பிங் தான் என்று செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி இருந்தது. ஆனால் இதனை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, மாமல்லபுரத்தில்தான் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் விரும்பி தேர்ந்தெடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.

இந்நிலையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் தான் இரண்டாவது சந்திப்பு நடக்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் விரும்பி தேர்ந்தெடுத்தாக இன்று காலை சில ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது, பிரதமர் மோடிதான் தனிப்பட்ட முறையில் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விரும்பி தேர்ந்தெடுத்தாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் வரலாற்று சிற்பங்களான ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை என பல இடஙகளை பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று மாலை சுற்றி பார்த்தனர். இன்று இரவு பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விருந்து அளிக்கிறார். அத்துடன் தனியாக சந்தித்து பேசுகிறார். நாளை இருவரும் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசுகிறார்கள்












Click it and Unblock the Notifications