கூட்டணிக்கு வந்தால் பாருங்க.. இல்லைனா விட்டுடுங்க.. தேமுதிக மீது கடுப்பில் மோடி!
Recommended Video

சென்னை: தேமுதிக கட்சி மீது பிரதமர் மோடி கோபத்தில் இருப்பதாக செய்திகள் வருகிறது. தேமுதிக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சனை செய்து வருவதால் பிரதமர் மோடி கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? ஏன் இத்தனை இழுபறி? ஏன் இத்தனை பேச்சுவார்த்தை என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் இந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. தேமுதிகவிடமும் பதில் இல்லை.
நேற்று சென்னையில் பாஜக - அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தேமுதிக கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிக இதில் கலந்து கொள்ளாது என்று முடிவானது.

மோடியின் குட்புக்
பொதுவாக தமிழகத்தில் பாஜகவை சேராத இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியின் குட்புக்கில் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவர் பாமக நிறுவனர் ராமதாஸ். இன்னொரு அரசியல் தலைவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மக்கள் நலக்கூட்டணி தொடங்கி ஆரம்பத்தில் இருந்தே பாஜக இவர்கள் இருவர் மீது நல்ல மதிப்பு வைத்து உள்ளது.

ஆனால் கோபம்
ஆனால் தற்போது மோடிக்கும், பாஜகவிற்கும் தேமுதிக மீது சிறிய கோபம் இருப்பதாக கூறுகிறார்கள். தேமுதிக தொடர்ந்து கூட்டணி உருவாகாமல் காலம் தாழ்த்தி வருவதால் மோடி இப்படி கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார். நேற்று சென்னை வந்த போது பிரதமர் மோடியும் கூட்டணி தலைவர்களிடம் இதை குறிப்பிட்டு விசாரித்து இருக்கிறார். தேமுதிக ஏன் கூட்டணிக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

விசாரித்தார்
பாஜக தமிழக பொறுப்பாளர் அமைச்சர் பியூஷ் கோயல் இதுகுறித்து மோடியிடம் விளக்கி இருக்கிறார். இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் காத்திருங்கள் என்று மோடியிடம் பியூஷ் கோயல் கூறி உள்ளார். முதல்வர் பழனிச்சாமியும், கண்டிப்பாக தேமுதிக கூட்டணிக்கு வரும். நாங்களே பேசி வரவைப்போம் என்றும் கூறி இருக்கிறார்.

மோடி கேள்வி
இந்த நிலையில் மோடி தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வர என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள். முடிந்த அளவு சீட் அதிகம் கேட்டால் கூட கொடுங்கள். ஆனால் கூட்டணி குறித்து 9ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று கூறியதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

மீண்டும் அறிவிப்பு
இதனால் அதிமுக மீண்டும் தனது பேச்சுவார்த்தையை தேமுதிகவுடன் தொடங்கி இருக்கிறது. பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுநாள் இந்த கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதன்பின் தேமுதிக தலைவர்கள் டெல்லியில் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளது, சமாதானம் பேச வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள் .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications