கூட்டணிக்கு வந்தால் பாருங்க.. இல்லைனா விட்டுடுங்க.. தேமுதிக மீது கடுப்பில் மோடி!
Recommended Video

சென்னை: தேமுதிக கட்சி மீது பிரதமர் மோடி கோபத்தில் இருப்பதாக செய்திகள் வருகிறது. தேமுதிக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சனை செய்து வருவதால் பிரதமர் மோடி கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? ஏன் இத்தனை இழுபறி? ஏன் இத்தனை பேச்சுவார்த்தை என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் இந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. தேமுதிகவிடமும் பதில் இல்லை.
நேற்று சென்னையில் பாஜக - அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தேமுதிக கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிக இதில் கலந்து கொள்ளாது என்று முடிவானது.

மோடியின் குட்புக்
பொதுவாக தமிழகத்தில் பாஜகவை சேராத இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியின் குட்புக்கில் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவர் பாமக நிறுவனர் ராமதாஸ். இன்னொரு அரசியல் தலைவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மக்கள் நலக்கூட்டணி தொடங்கி ஆரம்பத்தில் இருந்தே பாஜக இவர்கள் இருவர் மீது நல்ல மதிப்பு வைத்து உள்ளது.

ஆனால் கோபம்
ஆனால் தற்போது மோடிக்கும், பாஜகவிற்கும் தேமுதிக மீது சிறிய கோபம் இருப்பதாக கூறுகிறார்கள். தேமுதிக தொடர்ந்து கூட்டணி உருவாகாமல் காலம் தாழ்த்தி வருவதால் மோடி இப்படி கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார். நேற்று சென்னை வந்த போது பிரதமர் மோடியும் கூட்டணி தலைவர்களிடம் இதை குறிப்பிட்டு விசாரித்து இருக்கிறார். தேமுதிக ஏன் கூட்டணிக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

விசாரித்தார்
பாஜக தமிழக பொறுப்பாளர் அமைச்சர் பியூஷ் கோயல் இதுகுறித்து மோடியிடம் விளக்கி இருக்கிறார். இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் காத்திருங்கள் என்று மோடியிடம் பியூஷ் கோயல் கூறி உள்ளார். முதல்வர் பழனிச்சாமியும், கண்டிப்பாக தேமுதிக கூட்டணிக்கு வரும். நாங்களே பேசி வரவைப்போம் என்றும் கூறி இருக்கிறார்.

மோடி கேள்வி
இந்த நிலையில் மோடி தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வர என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள். முடிந்த அளவு சீட் அதிகம் கேட்டால் கூட கொடுங்கள். ஆனால் கூட்டணி குறித்து 9ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று கூறியதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

மீண்டும் அறிவிப்பு
இதனால் அதிமுக மீண்டும் தனது பேச்சுவார்த்தையை தேமுதிகவுடன் தொடங்கி இருக்கிறது. பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுநாள் இந்த கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதன்பின் தேமுதிக தலைவர்கள் டெல்லியில் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளது, சமாதானம் பேச வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள் .
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications