Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Breaking News Live: அன்பான வணக்கம்.. நாளை நமதே.. நாற்பதும் நமதே.. பிரதமர் மோடி

இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரே நாளில் நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

தேனி: அன்பான வணக்கம் என்று தமிழில் பேசி பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார். மேலும் நாளை நமதே, நாற்பதும் நமதே என கூறி மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இங்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து பேசுகிறார்.

இதற்காக அவர் நேற்று இரவே தமிழகம் வந்துள்ளார். ஆண்டிப்பட்டியில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

அதுபோல் ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும் ஆதரித்து பேசுகிறார். பிரதமரின் பொதுக் கூட்டத்தையொட்டி இரு இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Apr 13, 2019, 12:11 pm IST

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவத்தின் வீரத்தை எதிர்க்கட்சிகள் கேள்வி

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை விடுவிக்க முயற்சி எடுத்தோம்

அந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் அவமதித்தன- மோடி

Apr 13, 2019, 12:06 pm IST

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவேன்- மோடி

இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் திமுக- காங். கூட்டணிக்கு என்னை பிடிக்கவில்லை

ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் வளமுடனும் வாழ வேண்டும்

புதிய இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்

Apr 13, 2019, 12:05 pm IST

மக்களின் காவலாளியான நான் உஷாராக இருக்கிறேன் - மோடி

திருடர்கள் மற்றும் திருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்

தமிழ்நாட்டை வளமான மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம்

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் இல்லை

Apr 13, 2019, 11:44 am IST

தேனி வேட்பாளர் ரவீந்திரநாத், திண்டுக்கல் வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து மோடி பேச்சு

மதுரை வேட்பாளர் ராஜ் சத்யன், விருதுநகர் வேட்பாளர் அழகர்சாமியையும் ஆதரித்து மோடி பேச்சு

தேனி பொதுக் கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

Apr 13, 2019, 11:42 am IST

தேனி கரிசல்பட்டிவிலக்கில் பொதுக் கூட்டத்தில் மோடி பேசி வருகிறார்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார் மோடி

மோடி பேச்சை தொடங்குவதற்கு முன்னர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் ஓபிஎஸ் மகன்

Apr 12, 2019, 5:50 pm IST

பெரியார் பற்றிய புத்தகங்களை மோடிக்கு பரிசளிக்கப்போகிறேன்- ராகுல் காந்தி

தமிழர்களை யாராலும் அடக்கியாள முடியாது என்பதை மோடி உணர வேண்டும்

Apr 12, 2019, 5:12 pm IST

தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு- ராகுல் காந்தி

அனைத்து பிரிவு மக்களிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்

Apr 12, 2019, 2:44 pm IST

பண மதிப்பிழப்பு குறித்து யாரிடமும் மோடி ஆலோசிக்கவில்லை- ராகுல் காந்தி

கோடிக்கணக்கான மக்களின் கருத்துகளை கேட்டறிந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு

காங்கிரஸ் கட்சி ஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்போகிறது

காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து தமிழகத்தில் வறுமையை ஒழிப்போம்

சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு

Apr 12, 2019, 12:23 pm IST

அதிமுகவை கட்டுப்படுத்துவது போல மக்களை கட்டுப்படுத்த நினைக்கிறார் - ராகுல் காந்தி

ஆனால் அவரால் தமிழக மக்களை கட்டுப்படுத்தவே முடியாது - ராகுல் காந்தி

தமிழக மக்களை யாராலும், எப்போதும் கட்டுப்படுத்த முடியாது - ராகுல் காந்தி

யாரும், எங்கிருந்தும் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் காந்தி

தமிழர்கள் நினைத்தால்தான் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியும் - ராகுல் காந்தி

Apr 12, 2019, 12:23 pm IST

திமுக, காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் எல்லாம் அதனால்தான் மோடியை எதிர்க்கிறோம்- ராகுல் காந்தி

அவருக்கு நாட்டின் பன்முகத்தன்மை புரியவில்லை - ராகுல் காந்தி

Apr 12, 2019, 12:22 pm IST

இந்தியா பல பன்முகத்தன்மை கொண்ட நாடு - ராகுல் காந்தி

இங்கு பல மொழி, மதம், கலாச்சாரம் இருக்கிறது - ராகுல் காந்தி

பல வேறுபாடுகள் சேர்ந்ததுதான் இந்தியா- ராகுல் காந்தி

அதனால்தான் தமிழகத்தின் கலாச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது - ராகுல் காந்தி

தமிழர்களின் குரலை புறக்கணித்து வருகிறார்கள் - ராகுல் காந்தி

தமிழர்களின் குரலை புறக்கணிப்பது சரியான இந்தியாவாக இருக்க முடியாது - ராகுல் காந்தி

Apr 12, 2019, 12:13 pm IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரியில் பேச்சு

தமிழர்களின் குரல் மத்தியில் ஒலிக்க வேண்டும்- ராகுல் காந்தி

Apr 12, 2019, 12:04 pm IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரி வருகை

இன்னும் சற்று நேரத்தில் கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

Apr 12, 2019, 9:18 am IST

இன்று மதுரை வரும் பிரதமர் மோடி, ராகுல்

உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் தூங்காநகரம்

PM Modi speaks in election meeting in Andipatty and Ramanathapuram - Live Updates

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+