“பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம்”.. மோடி சொன்ன வார்த்தையை கப்பென பிடித்து விளாசிய மனோ தங்கராஜ்
சென்னை: அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மூன்று கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து, 4வது கட்டமாக வரும் மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 13ஆம் தேதி தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி.

அந்தவகையில் நேற்று பிரச்சாரத்தில் பேசும்போது, "ராகுல் காந்தி 5 இளவரசர்களைப் பற்றி எப்போதும் பேசுவார், தொடர்ந்து அதானி, அம்பானி குறித்து பேசி வந்த ராகுல் காந்தி தற்போது அமைதியாக உள்ளார். தேர்தல் அறிவித்த பிறகு ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் அதானி, அம்பானி குறித்து பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கறுப்புப் பணத்தை வாங்கினீர்கள்? மக்களவைத் தேர்தலுக்காக எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள்? 5 ஆண்டுகளாக விமர்சித்து வந்தவர்கள் ஒரே இரவில் அமைதி காப்பது ஏன்? ஏதோ தவறாக நடப்பதை நான் அறிகிறேன். நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்" என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் மோடி பேச்சை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில். "முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் !!
அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மட்டும் தான், அதானி, அம்பானிக்கு பொருந்தாது என இதன் மூலம் பிரதமர் மோடி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications