ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது... மோடி நெகிழ்ச்சி ட்வீட்
Recommended Video
சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்புக்காக சென்னை வந்திறங்கிய நேரத்தில் பிரதமர் மோடி சீன மற்றும் தமிழ் மொழிகளில் ட்விட்டர் பக்கத்தில் தமது வருகை குறித்து பதிவிட்டுள்ளார்..
சென்னையை அடுத்த பழமை வாய்ந்த துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் சீனா அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்றும் நாளையும் சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்புக்காக பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவளத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார் மோடி.
பிரதமர் மோடி சென்னை வந்திறங்கிய நேரத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், சீன மொழிகளில் பதிவிட்டுள்ளார். அதில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என குறிப்பிட்டுள்ளார் மோடி.
在金奈降落。
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
我很高兴来到泰米尔纳德邦这片伟大的土地,泰米尔纳德邦以其伟大的文化和热情好客而闻名。
泰米尔纳德邦将接待习近平主席,这十分令人高兴。愿本次非正式会晤进一步加强印中关系。 pic.twitter.com/cS7t6jO3xJ
சீன மொழியில், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழகம் வந்தடைந்ததில் மகிழ்ச்சி எனவும் மோடி பதிவிட்டுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். pic.twitter.com/d3nrL0kipn
— Narendra Modi (@narendramodi) October 11, 2019












Click it and Unblock the Notifications