சென்னையில் சாலையில் செல்ல வேண்டும்.. ஆசைப்பட்ட ஜி ஜின்பிங்.. ஓ இதுதான் ரியல் பின்னணியா!
சென்னையில் சாலையில் பயணிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: சென்னையில் சாலையில் பயணிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பப்பட்டு இருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று சென்னைக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தருகிறார். பிரதமர் மோடி உடன் அவர் இன்று மாலை சந்திப்பு நடத்துகிறார். இந்த மூன்று நாள் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள்
இந்த சந்திப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகள் கூடி கடந்த இரண்டு மாதம் முன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். டெல்லியில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. அப்போது மத்திய அரசு இரண்டு நாட்டு தலைவர்களின் கூட்டம் நடப்பதற்கான இடங்களை பரிந்துரை செய்துள்ளது.

எப்படி
ஆனால் அதில் தமிழ்நாடு பரிந்துரை செய்யப்படவில்லை. அப்போது இந்தியாவிற்கான சீன தூதராக இருந்த லியோ சான்ஹாய்தான் தமிழகத்தில் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். சீனா மற்றும் மாமல்லபுரம் இடையே இருக்கும் தொடர்பு குறித்து பேசி அவர் இந்திய அதிகாரிகளை சம்மதிக்க வைத்துள்ளார்.

ஹெலிகாப்டர் பயணம்
அதேபோல் முதலில் ஜி ஜின்பிங் கிண்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்வதாக இருந்தது. மூன்று நாட்களும் அவர் ஹெலிகாப்டர் பயன்படுத்துவதாக இருந்தது. பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஜி ஜின்பிங் சென்னை
ஆனால் ஜி ஜின்பிங் சென்னையில் சாலையில்தான் செல்ல வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறி உள்ளார். முதலில் இதை மத்திய அரசு ஏற்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கடைசி கட்டத்தில் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு, மாமல்லபுரம் விழா நடக்கும் பகுதிக்கு காரில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுதான் காரணம்
இதனால்தான் சென்னையில் சாலைகள் சரி செய்யப்பட்டு. ஸ்பீட் பிரேக்கர்கள் நீக்கப்பட்டு. சாலை போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால்தான் சென்னையில் பல்வேறு இடங்களில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சாலை வழி போக்குவரத்து
இந்தியாவை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை அதிபர் ஜி ஜின்பிங் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர் சாலை வழியாக செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் என்று குறிப்பிடுகிறார்கள்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications