மொத்தமாக ஸ்தம்பித்த சென்னை.. கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. சமாளிக்க முடியாமல் திணறல்!
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை காரணமாக தற்போது சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது என்று கூறலாம். உலகத்தின் பார்வையே இன்று தமிழகத்தின் மேல்தான் இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார்.
பிரதமர் மோடியுடன் மூன்று நாட்கள் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். மொத்தம் மூன்று நாள் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
என்ன போக்குவரத்து
இதனால் சென்னையில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிண்டி ஏர்போர்ட்டில் இருந்து அண்ணாசாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, ஈசிஆர் என்று வரிசையாக எல்லா இடங்களிலும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எங்கு
பெருங்களத்தூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதிக்கப்படவில்லை. இவைமதுரவாயல் வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் அந்த மதுரவாயல் சாலைகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தென் சென்னை
அதேபோல் தென் சென்னையில் இருந்து வட சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லாவரம் வழியாக திருப்பி விடப்படுகிறது. இவை குரோம்பேட்டை, தாம்பரம் சென்று அங்கிருந்து மதுரவாயல் வழியாக சுற்றி உள்ளே வருகிறது.
சாலை அடைப்பு
அதேபோல் கிண்டியில் மொத்தமாக இதனால் சாலை அடைக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்றால் அது கிண்டிதான். இதனால் வெளியூர் வாகனங்கள் சென்னைக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முட்டுக்காடு சாலை
அங்கு தற்போது மொத்தமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முட்டுக்காடு நோக்கி செல்லும் ஈசிஆர் சாலையும் மூடப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் சாலையில் செல்லும் வாகனங்கள் எல்லாம் சோளிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.