இதைத் தவிர வேறு வழியில்லை.. ஊரடங்கு நீட்டிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு.. டாஸ்மாக் உத்தரவால் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மதுக்கடைகள் திறக்கப்படாதது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், அதை ஜூன் 14ம் தேதிவரை நீட்டித்து அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது.

11 மாவட்டங்களில் நிலவரம்
இதில் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சற்று குறைவான தளர்வுகளும், பிற மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் , கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது என குறிப்பிட்டு அங்கு மட்டும் மளிகை கடை திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகள் மட்டும் அமலுக்கு வந்துள்ளன.

தனியார் நிறுவனங்கள்
அதேநேரம், தமிழகம் முழுக்க டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அரசு அலுவலகத்தில் 30 விழுக்காடு பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட துறைகளை தவிர்த்து பிற, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

ஏழைகளுக்கு பலன்
இதேபோல சலூன் கடைகளை திறக்கவும் அனுமதிக்கவில்லை. பூ, காய்கறி, பழங்கள் விற்பனை கடைகள் காலை 6 மணியிலிருந்து மாலை 5 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே ஏழை, எளியவர்கள் பலனடைவார்கள்.

ராமதாஸ் வரவேற்பு
இந்த நிலையில்தான், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கிற்கு, ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து டுவீட் வெளியிட்டுள்ளார். "தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் நோயைத் தடுக்க இதைத் தவிர வேறு வழியில்லை. தளர்வு என்ற பெயரில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படாதது மகிழ்ச்சியளிக்கிறது. மதுக்கடைகள் நிரந்தமாக மூடப்பட்டால் கூடுதல் மகிழ்ச்சி!" இவ்வாறு ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications