சட்டசபை தேர்தல்: பாமகவில் பிப். 23 முதல் பிப். 26 வரை விருப்ப மனு- ரூ10,000 கட்டணம்: ஜி.கே. மணி
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 23-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. அதிமுக, திமுக, மநீம உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

திமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களையே அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில் பாமகவும் விருப்ப மனு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கையில், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து பிப்ரவரி 23-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மண்டல அலுவலகத்தில் இவ்விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். வரும் 23-ந் தேதி காலை 10 மணி முதல் பிப்.26-ந் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை மேற்கொண்ட அலுவலகத்தில் பெற்று நிரப்பி உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யலாம்.
பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ10,000, தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ5,000 அனைத்து தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ5,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications