தைலாபுரத்தில் ராமதாஸ்.. சென்னையில் அன்புமணி.. ஒரே நாளில் சந்தித்த குருமூர்த்தி.. என்ன நடந்தது?
சென்னை: பாமக தலைவர் அன்புமணி மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் நேற்றிரவு சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து குருமூர்த்தி ஆலோசித்திருந்த நிலையில், இரவில் அன்புமணியை சந்தித்திருப்பது பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்திருக்கிறது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதும், அன்புமணி அதற்கு வேறொரு மேடையில் பதிலடி கொடுப்பதுமாக சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இந்த சூழலில் நேற்று திடீரென சென்னையில் இருந்து புறப்பட்ட அன்புமணி தைலாபுரம் சென்றார்.

ராமதாஸ் - குருமூர்த்தி
சுமார் ஒரு மணி நேரம் தைலாபுரத்தில் அன்புமணி ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதன்பின் அன்புமணி புறப்பட்ட அடுத்த 5 நிமிடங்களில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ராமதாஸை சந்தித்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
என்ன நடந்தது?
இது வெறும் நட்பு ரீதியிலான சந்திப்பு என்று கூறிய குருமூர்த்தி, அன்புமணி வந்ததே தெரியாது என்றும் கூறினார். ஆனால் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வரவுள்ள நிலையில், திடீரென குருமூர்த்தி பாமக விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்த சென்றது பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பாமக - பாஜக கூட்டணி
இதனால் பாமக - பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் சென்னை வந்தபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குருமூர்த்தி இல்லத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ஆலோசனை நடத்தி இருந்தார். இதனால் குருமூர்த்தி பாஜக கூட்டணியை வலுப்படுத்த அடுத்தக் கட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டு வருகிறது.
அன்புமணி - குருமூர்த்தி
தற்போது நேற்றிரவு பாமக தலைவர் அன்புமணி மற்றும் குருமூர்த்தி இருவரும் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக ராமதாஸ் சொன்ன கருத்துகள் அன்புமணியிடம் சொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அதற்கேற்ப இன்று ராமதாஸ் பாமக நிர்வாகிகளிடம், விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறி இருக்கிறார்.
அடுத்த நகர்வு?
இதனால் பாமகவில் நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அமித் ஷா மதுரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின், பாமகவின் அடுத்தக் கட்ட நகர்வுகள் இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஒரே நாளில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் சந்தித்து குருமூர்த்தி பேசி இருப்பது பாமகவினர் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகிறது.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications