அன்புமணி நடத்திய போராட்டம்! ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்! பாமகவுக்கு கிடைத்த பாதி வெற்றி!
சென்னை: போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி அண்மையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடத்திய நிலையில் தீவிர ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் தீவிர நடவடிக்கைகளை, தங்களுக்கு கிடைத்த பாதி வெற்றியாக கருதுகிறார்கள் பாமகவினர்.
இதனிடையே இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், பாமகவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து போதைப் பொருட்கள் ஒழிப்பில் தீவிரம் காட்டுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

போதைப் பொருட்கள்
தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் இறங்கியிருக்கிறார். இதற்காகவே காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை இன்று நடத்தி சில கறார் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். போதைப் பொருள் தயாரிப்பவர்கள் அதை கடத்தி வருபவர்கள் என அதில் தொடர்புடைய அனைவரையும் சமூகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

பாமக எம்.எல்.ஏ.
இதுமட்டுமல்லாமல் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள அவர், பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தச் சொல்லியுள்ளார். இவை எல்லாமே நடப்பதற்கு பாமக நடத்திய போராட்டம் தான் காரணம் எனக் கூறுகிறார்கள் அக்கட்சியினர். இது தொடர்பாக சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஒன் இந்தியா தமிழிடம் பேசுகையில், போதைப் பொருட்கள் ஒழிப்பில் முதல்வர் வேகம் காட்டுவதை வரவேற்பதாக கூறினார்.

போதைப் பொருட்கள்
போதைப் பொருட்கள் ஒழிப்பு விவகாரத்தில் பாமகவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததற்காக நன்றி கூறிக் கொள்வதாகவும் ஆனால் அதேவேளையில், வெறும் ஆய்வுக்கூட்டம், விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பதோடு முடிந்துவிடாமல் தமிழகத்தில் முற்றிலும் போதைப் பொருட்களை முதல்வர் ஒழித்துக்காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் இந்த விவகாரம் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்காது என அருள் எம்.எல்.ஏ. கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications