ஒருதலைக் காதலால்... பெண்களுக்கு தொல்லை... தண்டனையை கடுமையாக்க ராமதாஸ் கோரிக்கை!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருதலைக் காதல் கும்பலின் தொல்லையால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் இளம்பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது என்று பாமக ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், ''கள்ளக்குறிச்சி அருகே தொட்டியத்தில் காதலிக்க மறுத்த பத்தாம் வகுப்பு மாணவியை கழுத்தில் பிளேடால் கீறி கொலை செய்ய இளைஞர் முயன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான குற்றவாளியை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

PMK S. Ramadoss demands harsher punishment for one-sided love against women

சர்வதேச பெண் குழந்தைகள் நாளில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டுகள்.

PMK S. Ramadoss demands harsher punishment for one-sided love against women

ஒருதலைக் காதல் கும்பலின் தொல்லையால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் இளம்பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெண்களை பின் தொடர்ந்து தொல்லை தருவோருக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+