குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்புத் தமிழர்.. எம்பி வசந்தகுமார் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
சென்னை: காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவு இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது, குமரியில் பிறந்து இமயம்வரை பரவிய கறுப்புத் தமிழர் காலமாகிவிட்டார் என்று கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா பாதிக்கப்பட்டு இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த எம்பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். இவரின் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வசந்தகுமார் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து செய்துள்ள இரங்கல் டிவிட்டில்,
வசந்தகுமார் எம்.பி மறைவு
இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது.
குமரியில் பிறந்து இமயம்வரை பரவிய
கறுப்புத் தமிழர் காலமாகிவிட்டார்.
அவர் உழைப்புத் தேனீ; ஓயாக் கடல்;
அடித்தட்டு மக்களின் அன்பர்.
பூமிக்கு வந்துபோன வசந்தமாய்ப் போய்விட்டார்.
அவர் புகழ் வாழ்க., என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications