போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சொந்த செலவில் ரூ2.25லட்சத்துக்கு மருந்து வாங்கி கொடுத்த கமிஷ்னர் விஸ்வநாதன்
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாம்பலம் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பில் தடுப்பூசி வாங்கி கொடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேசகரம் நீட்டியுள்ளார்.
சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலில் ஐஐடியில் உள்ள சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் கடைசி கட்ட முயற்சியாக actemira tocilizumab எனும் மருந்தை பரிந்துரைத்தனர்.
இந்த தடுப்பூசியின் விலை ரூ.75 ஆயிரம் என்று கூறப்படுகிறது. 3 நாட்கள் இந்த தடுப்பூசியை போட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தனது சொந்த செலவில் மாம்பலம் இன்ஸ்பெக்டருக்கு அந்த மருந்தை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் வாங்கி கொடுத்துள்ளார்.
தந்போது இன்ஸ்பெக்டரின் உடலில் செலுத்தப்பட்டு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் மனிதநேய நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications