Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் சீண்டல்.. பத்ம சேஷாத்ரி ராஜகோபாலன் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாருக்குள்ளான பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Padma Seshadri Rajagopalan கைதானது எப்படி? பரபர பின்னணி | OneIndia Tamil

    சென்னை கே கே நகர் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்ற வணிகவியல் ஆசிரியர் பல ஆண்டுகளாக அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னாள் மாணவி புகார் அளித்திருந்தார். அதே போன்ற பல மாணவிகளும் புகார் அளித்து வந்தனர்.

    மாணவி

    மாணவி

    ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுக்கும் போது குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து அப்படியே நேராக வருவது, இடுப்பில் வெறும் துண்டை மட்டும் அணிந்து கொண்டு வகுப்பு எடுத்தது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுகின்றன.

    ராஜகோபாலன்

    ராஜகோபாலன்

    இதையடுத்து காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி நேற்றைய தினம் பள்ளி நிர்வாகத்திடமும் ராஜகோபாலனிடமும் விசாரணை நடத்தினார். இதையடுத்து மடிப்பாக்கத்தில் சுற்றி வளைக்கப்பட்ட ராஜகோபாலன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

    இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    கல்வித் துறை

    கல்வித் துறை

    இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் அறிக்கை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ராஜகோபாலன் கைது

    ராஜகோபாலன் கைது

    இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+