"பெரியார் வேஷம் போட்ட குழந்தையை.." ஒற்றை கமெண்டால் கம்பி எண்ணும் வெங்கி.. தேவையா இது..!
சென்னை : பெரியார் வேடமிட்ட குழந்தையை கொன்று ரோட்டில் தொங்கவிட வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவு செய்த பேரூராட்சி பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில நாட்களாக குழந்தைகளை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
காமெடியோடு சமூக கருத்துக்களை சொல்லும் வகையில் அந்த ரியாலிட்டி ஷோவில் பெரியார் வேடமணிந்த குழந்தை ஒன்று பங்கேற்றது பெரும் பேசுபொருள் ஆகியது.

டிவி நிகழ்ச்சி
இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தையை பார்த்த கயத்தாறு பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற நபர் அந்த குழந்தையை அடித்து கொன்று ரோட்டில் தொங்க விட வேண்டும் என்றும், அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயம் வரும் என்றும் கூறி பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ஏன் வா.உ.சி., தேவர், பாரதி , நேதாஜி இவர்கள் வேஷம் போட முடியாதா என்றும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற பெயரில் இருந்த அந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்திருந்தார்

போலீசில் புகார்
இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை மாநகர செயலாளர் சாஜித் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் பெண் விடுதலை, இளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அப்படி பெரியார் வேடமணிந்து பேசிய குழந்தைகயை தமிழக முதலைமைச்சர் அழைத்து பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

கடும் நடவடிக்கை
வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் குழந்தையை அடித்து கொன்று நடு ரோட்டில் தொங்கவிடவேண்டும், என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தனக்கு பிடிக்காத வேடமாக இருந்தாலும் மழலை என்று பாராமல் காட்டுத்தனமாக பேசிய அடிப்படை மதவாதியை கண்டித்து இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளோம். மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.

கமெண்ட் செய்தவர் கைது
இந்நிலையில் வெங்கடேஷ் குமார் பாபுவின் கமெண்ட் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது எடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்தது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து நிலையில் வெங்கடேஷ் குமார் பாபு மீது இதுகுறித்து கயத்தாறு பேரூர் தி.மு.க. செயலாளர் சுரேஷ் கண்ணன் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வெங்கடேஷ் குமார் பாபுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications