நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்- உதைத்தால் பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது போலீஸ் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ1,001 பரிசு என அறிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் உதவியாளர் மீது பெங்களூரு விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விஜய் சேதுபதி அவமரியாதையாக பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால் இது தொடர்பாக விஜய் சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தமது கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த விவகாரத்தை கிளப்பி இருந்தார்.

 அர்ஜூன் சம்பத் மிரட்டல்

அர்ஜூன் சம்பத் மிரட்டல்

மேலும் அந்த பக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்; ஒரு உதைக்கு ரூ1,001 பரிசு தொகையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்ததாக அர்ஜூன் சம்பத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சமூக அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக அர்ஜூன் சம்பத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 சூர்யாவுக்கு அர்ஜூன் சம்பத் பாணியில் மிரட்டல்

சூர்யாவுக்கு அர்ஜூன் சம்பத் பாணியில் மிரட்டல்

அர்ஜூன் சம்பத்தின் இந்த பதிவைத் தொடர்ந்துதான் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்துக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பாமகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1,00,000 லட்சம் பரிசு வழங்கப்படும் என மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து பாமகவினரோ, பரிசு தொகை வேண்டாம் விஜய் சேதுபதியை நாங்கள் தாக்குகிறோம் என கூறியதால் பதற்றம் ஏற்பட்டது.

 பாமக நிர்வாகி மீதும் வழக்கு

பாமக நிர்வாகி மீதும் வழக்கு

இது தொடர்பாக நடிகர் சூர்யா தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+