அவுக ரூ2 கோடியா... நாங்க ரூ 4 கோடி... உங்க பணத்துக்கும் எங்க பணத்துக்கும் ஜோடி போடலாமா ஜோடி?
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் களத்தில் எம்.எல்.ஏக்கள் 'ஏல ஆடுகளை'ப் போல குதிரை பேர சந்தையில் கூவி கூவி விற்கப்படுகின்றனர். இந்த சந்தையை அறுவடை செய்யப் போவது அதிமுகவா? திமுகவா? என்பதுதான் பெரும் விவாதம்.
அதிமுக அரசை கவிழ்ப்பதில் திமுக அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. மேலும் திமுக தலைமையை நம்பி சென்றுவிட்டால்., காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்து போட்டு ஆளும் தரப்பு ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார் என்கிற அச்சம் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் இருக்கிறது.

இதனால்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட திமுக பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஒருவேளை திமுகவின் மாஜி தலைமை ஆக்டிவ் அரசியலில் இருந்திருந்தால் வரை நம்பி நிச்சயம் அதிமுக எம்.எல்.ஏக்கள் கணிசமாக தாவியிருப்பர்.
திமுகவின் தற்போதைய ஆளுமை மீதான தயக்கம், ஆளும் தரப்பின் வியூகங்கள் ஆகியவற்றால்தான் 2 ஆண்டுகளாக எந்த பிரச்சனையுமே இல்லாமல் அதிமுக அரசு ஓடிக் கொண்டிருக்கிறது. திடீரென திமுகவில் அதிகார பசி கொண்ட ஒரு கோஷ்டி, அதிமுக எம்.எல்.ஏக்களை வளைத்துக் காட்டுகிறோம் என கோதாவில் குதித்து கமிஷன்களையும் பேசி வருகிறது.
இந்த பேரத்துக்கு 4 எம்.எல்.ஏக்கள் வரை சம்மதித்துவிட்டனராம். மேலும் சிலர் ஊசலாட்டத்தில் இருக்கின்றனராம். இந்த விவகாரங்கள் அனைத்தும் ஆளும் தரப்புக்கு உளவுத்துறை அனுப்பி வைத்திருக்கிறது.
போனால் போகட்டும்; தேவையே இல்லை என நினைக்கும் சில எம்.எல்.ஏக்களை பற்றி ஆளும் தரப்பு கவலையேபடவில்லையாம். அதேநேரத்தில் உண்மையிலேயே பணத்தேவைக்காக அணி மாறுகிறோம் என கூறும் எம்.எல்.ஏக்களிடம் ஆளும் தரப்பு, திமுக தரப்பு கூறும் பேரத் தொகையை போல இரு மடங்கு பேசுகிறது.
இதனால் அங்கிட்டு போவதா? இங்கிட்டு போவதா? என செல்லும் ஊருக்கு வழியாதவர்களாக திருதிருவென விழி பிதுங்கி போய்கிடக்கிறார்களாம் அதிமுக எம்.எல்.ஏக்கள்.












Click it and Unblock the Notifications