ஒரே நாளில் ஆளே மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட்டை நோட் பண்ணுங்க..! காரிலும் முதல்வர் ஸ்டாலின் படம்!
சென்னை: திமுகவில் இணைந்த பிறகு, தன் காரில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை பொருத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், தனது சட்டை பாக்கெட்டிலும், ஜெயலலிதா படத்துக்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார் ஓபிஎஸ்.
அதிமுகவில் இருந்து மூன்று முறை முதல்வராகவும் ஒருமுறை துணை முதல்வராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று (பிப்ரவரி 27) திமுகவில் இணைந்தார். இந்நிலையில், திமுகவில் இணைந்த ஒரே நாளில், தனது சட்டை பாக்கெட்டிலும் காரிலும் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை அகற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும், காரில் திமுக கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் முன்னாள் எம்.பி ஓபி ரவீந்தரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஆக இருந்த ஐயப்பன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
தாய்க்கழகத்தில் இணைந்ததில் பெருமகிழ்ச்சி எனக் கூறினார் ஓபிஎஸ். இதை தொடர்ந்து, தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காரில் படம் மாற்றம்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு காரில் வருகை தந்தபோது, அவரது காரில் முன்புற டேஷ்போர்டில் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. திமுகவில் இணைந்த நிலையில், அவரது காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும், காரின் முன்பகுதியில் திமுக கொடியும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் இருந்தது. முன்பு, ஓபிஎஸ் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் இருக்கும். இப்போது, அதற்குப் பதிலாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் எடுத்த இறுதி முடிவு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், அந்த கோரிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நிராகரித்தனர்.
இதனிடையே, ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை அவர் மறுத்ததை அடுத்து அவருடன் இருந்த முக்கிய புள்ளிகள், ஆதரவாளர்கள் என பலரும் விலகி திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டார். இந்நிலையில் தான் அவர் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய பதவியும், அவரது ஆதரவாளர்களுக்கு சீட்களும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?











Click it and Unblock the Notifications