அகில உலக வரலாற்றிலேயே 'நச்’ பேனர்! தூத்துக்குடியை தெறிக்கவிட்ட சீமான் தம்பிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகில உலக அரசியல் வரலாற்றிலேயே கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் என்ற பதாகையுடன் கட்சி மாநாட்டில் பங்கேற்பது தூத்துக்குடி நாம் தமிழர் நிகழ்ச்சியில்தான் நடந்துள்ளது. இதனை மேடையிலேயே சீமான் சுட்டிக்காட்டியும் பேசினார்.

தூத்துக்குடியில் மே18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றனர்.

Political parties shock over Naam Tamilar Party banner in Thoothukudi

வழக்கம் போல ஈகைச்சுடரேற்றி, உப்பில்லா கஞ்சி வழங்கி, உறுதி மொழி ஏற்று சீமான் பேருரையாற்றினார். சீமான் தமது உரையின் போது, கட்சியில் எத்தனையோ பாசறைகள் இருக்கிறது.. அதேபோல கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் சிலர். இந்த கூட்டத்துக்கும் ஒரு வேன் அப்படி வந்து போய் கொண்டிருந்தது.

இதைப்பார்க்கும் போது பல்வேறு பாசறைகளுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் பாசறை- அவுட் சோர்ஸிங் என ஒரு அமைப்பு இருந்துட்டுதான் போகட்டுமே என எண்ண தோன்றுகிறது. கட்சி என்பது சில அமைப்பு விதிகளைக் கொண்டது; அதனை மீறுகிற போது நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது சமூக வலைதளங்களில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் என்ற பதாகையுடன் தூத்துக்குடியை மிரட்டிய அந்த வாகனம் தொடர்பான படங்கள் பகிரப்பட்டு வருகிறது. நன்னிலம் சட்டசபை தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரே சீமான் படத்துடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்ற பதாகையுடன் வேனில் தூத்துக்குடியில் வலம் வந்துள்ளனர். இதனையே சீமான் மேடையில் சுட்டிக்காட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+