Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பண்டிகை.. 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்... அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

தீபாவளி சமயத்திலும் கூட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 சிறப்புப் பேருந்து நிலையங்கள்

சிறப்புப் பேருந்து நிலையங்கள்

இது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு , சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து ஜனவரி 11 முதல்13 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

 16,768 சிறப்புப் பேருந்துகள்

16,768 சிறப்புப் பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஜன. 11 - 13 வரை சென்னையில் இருந்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல பிற ஊர்களில் இருந்து 6,468 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக ஜனவரி 16 முதல் 18 வரை 16,709 பேருந்துகள் இயக்கப்படும்.

 எப்படி முன்பதிவு செய்யலாம்

எப்படி முன்பதிவு செய்யலாம்

பயணச்சீட்டை முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம் ) பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல www.tnstc.in , tnstc official app, ரெட்பஸ், பேடிஎம் போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

 புகார் எண்கள்

புகார் எண்கள்

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450 , 94450 14436 ஆகிய தொலைப்பேசி மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 , 044 24749002 என ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

 நெடுஞ்சாலை உணவகம்

நெடுஞ்சாலை உணவகம்

அரசு பேருந்துகள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள சாலையோரம் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் இருந்தால் அது குறித்து ஆய்வு நடத்தி உணவக உரிமம் ரத்து செய்யப்படும். அதேபோல படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே ஆலோசனை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+