இன்று மாலை பூண்டி ஏரி திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் பாயப்போகும் வெள்ளம்.. மக்களுக்கு வார்னிங்..!
சென்னை: இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரி திறக்கப்படுகிறது. 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய் தொடங்கி வியாழன் வரை கனமழை பெய்த காரணத்தால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வந்தது.
சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரி அண்மையில் 22 அடியை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டது.

அதிகரிப்பு
இதனிடையே பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர் மழையாலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், அம்மம்பள்ளி அணையிலிருந்தும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.

எவ்வளவு நீர்
ஏற்கெனவே பூண்டி ஏரிக்கான வரத்துக் கால்வாய் மூலம் மழைநீரும், கிருஷ்ணா கால்வாயில் நீர் வந்தது. ஏரியில் நீர் இருப்பு அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் புதன்கிழமை நிலவரப்படி 1,842 மில்லியன் கன அடியாக இருந்தது நீர் இருப்பு, பிற்பகலில் 1,872 கன அடியாக உயர்ந்தது. ‘

நீர்மட்டம்
பூண்டி ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள் மற்றும் மூங்கில் கம்புகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்நிலையில் பூண்டி ஏரியில் நீர் இருப்பு 33 அடியை நெருங்கி உள்ளது.

கொசஸ்தலை ஆறு
வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால் இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications