"செய்தியாளர் பின்னால் ஏன் ஓடுகிறீர்கள்!" போலீஸை கேட்ட நீதிபதிகள்! சவுக்கு சங்கர் விடுதலை
சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் இன்றைய தினம் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சவுக்கு மீடியா எனும் யூடியூப் சேனலின் உரிமையாளர் சவுக்கு சங்கர், ஒரு தயாரிப்பாளரை மிரட்டி பணம் கேட்டு தாக்கியதாக வந்த புகாரின் பேரில் கடந்த 13 ஆம் தேதி ஆதம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் எனும் பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சவுக்கின் ஆதம்பாக்கம் அபார்ட்மென்ட்டிற்கே வந்த போலீஸார் கதவை உடைத்து சங்கரை கைது செய்தனர்.
இதற்கு பல பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது தாய் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது "நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. வசிக்கும் இடத்தை போலீஸாருக்கு தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
அப்போது நீதிபதிகள் மேலும் கூறுகையில், நீங்கள் (காவல் துறை) ஏன் பத்திரிகையாளர் பின்னால் ஓடுகிறீர்கள்? புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமை. சட்டசபையில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது.
கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால் நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பினால் அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம்.

நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் கொண்டும் சவுக்கு சங்கரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதிக்கு முன்பு அவர் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புழல் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுதலையாகி வெளியே வந்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications