Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷார்! DTCP அப்ரூவல் இருந்தாலும் இனி நிலம் வாங்க முடியாது? இதோ தமிழக அரசின் சூப்பர் 'லாக்' சிஸ்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நில வகைப்பாடு குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தவும், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களைப் பாதுகாக்கவும் விரிவான "நில வகைப்பாடு தகவல் அமைப்பு" ஒன்றை உருவாக்க திட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. இதுதான் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. என்ன காரணம்?

முதலில் நில வகைப்பாடு என்றால் என்ன என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.. நில வகைப்பாடு தகவல் தொகுப்பு என்பது ஒரு நிலத்தின் சட்டப்பூர்வமான தன்மை மற்றும் அதன் தற்போதைய பயன்பாட்டை துல்லியமாக வரையறுக்கும் ஒரு டிஜிட்டல் ஆவணமாகும்.

Poramboke Land DTCP TN Government Land classifications

நில வகைப்பாடு தகவல் அமைப்பு

இது வெறும் நில அளவீடு மட்டுமல்லாமல், அந்த நிலம் நன்செய் அல்லது புன்செய் விவசாய நிலமா, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமா, நீர்நிலையா அல்லது வனப்பகுதியா போன்ற விவரங்களை எல்லாவற்றையும் உள்ளடக்கியது...

இந்தத் டேட்டாபேஸ் உருவாக்கப்படுவதால் நில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன், பொதுமக்கள் நிலம் வாங்கும்போது ஏற்படும் ஏமாற்றங்கள் மற்றும் சட்ட சிக்கல்கள் தவிர்க்கப்படும்.. குறிப்பாக, ஒரு நிலம் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற "மண்டல வகைப்பாடு" இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

நில வகைப்பாடு - புதிய வசதிகள்

கடந்த 2024ல் இது பற்றின ஒரு அறிவிப்பு வெளியானது.. அதாவது, தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் 56 நகரங்களில் நில வகைப்பாடு குறித்த தகவல்களை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

நகரமயமாக்கல் தீவிரமடைந்து வரும் நிலையில், விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை கண்காணிக்கவும், அங்கீகரிக்கப்படாத மனைகளை மக்கள் வாங்குவதை தடுக்கவும் இந்தத் தகவல் தொகுப்பு ஒரு கேடயமாகவே செயல்பட்டது என்று சொல்லலாம்..

இது நிர்வாக ரீதியாக பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததோடு, நிலப் பயன்பாட்டு மாற்றங்களுக்கான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்கவும் அரசுக்கு உதவியதை இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..

திட்டக்குழு - தரமான சம்பவம்

இப்படிப்பட்ட சூழலில்தான் அடுத்த குட்நியூஸ் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தவும், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களைப் பாதுகாக்கவும் விரிவான "நில வகைப்பாடு தகவல் அமைப்பு" ஒன்றை உருவாக்க திட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த அமைப்பு வெறும் தரவுத்தளமாகச் செயல்படாமல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களை ஒருங்கிணைத்து செயல்படுமாம்,.. இதன் மூலம் மாநிலத்தின் எந்த பகுதியில் நிலப் பயன்பாடு மாறினாலும் அதை உடனுக்குடன் கண்டறிய முடியும்.

நீர்நிலைகள் பாதுகாப்பு - பயன்கள்

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன தெரியுமா? நீர்நிலைகளை பாதுகாப்பதாகும். பல இடங்களில் ஏரிகள் மற்றும் குளங்கள் நில ஆவணங்களில் மறைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றன.,.. ஆனால் ,இந்த புதிய தகவல் அமைப்பு அமலுக்கு வரும்போது, நீர்நிலைகளின் எல்லைகள் டிஜிட்டல் முறையில் உறுதிப்படுத்தப்படும்.. இதனால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும்.

அதுமட்டுமல்ல, தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான நிலங்கள் எங்குள்ளன, அவை எந்த வகைப்பாட்டில் உள்ளன என்பதை இந்த ஒற்றைச் சாளர முறை மூலம் உடனே அறிந்து கொள்ள முடியும்...

400 சொற்கள்

சுமார் 400 சொற்களில் அமையவுள்ள இந்த விரிவான திட்ட அறிக்கையானது, தமிழகத்தின் எதிர்கால கட்டுமானத் திட்டங்களுக்கு ஒரு வரைபடமாக அமையும். நகர வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைக்க இது பெரிதும் உதவும் என்றும் நம்பப்படுகிறது...

இதன் மூலம் பொதுமக்கள் வாங்கப்போகும் நிலம் எத்தகையது என்பதை எந்தவித அலைச்சலுமில்லாமல் தெரிந்துகொள்ள முடிவதுடன், அரசின் திட்டமிடல் பணிகளும் வேகம் பெறும்..

ஆக மொத்தம் மாநில திட்டக் குழுவின் இந்த முன்னெடுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..!!!..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+