பகுஜன் சமாஜ் ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமனம்.. இவரை பற்றி தெரியுமா?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி பொற்கொடி, பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் புதிய மாநிலத் தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு பொறுப்பு: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணை தலைவராக இளமான் சேகர், மாநில பொருளாளராக கமலவேல் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொற்கொடி: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. வழக்கறிஞரான பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.
பட்டியலின மக்களின் உரிமைக்காக பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங், திருமணம் செய்துகொண்டால் தன்னுடைய தீவிர அரசியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்று கருதினார். மேலும், தனது அரசியல், சமூக செயல்பாடுகள் காரணமாக தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதையும் உணர்ந்திருந்தார். எனவே, திருமணமே செய்துகொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருந்தார் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங் வகித்த பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியில் வழக்கறிஞர் ஆனந்தன்.. யார் இவர்?
வழக்கறிஞர்: திருநாவுக்கரசு - விஜயலட்சுமி தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்த பொற்கொடி சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். அண்ணல் அம்பேத்கர் மீது கொண்ட பற்றினால் அவரது வழியில் பொற்கொடியும் பௌத்த மதத்தைத் தழுவினார்.
பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகிலேயே உருவாக்கி இருந்த புத்த விகாருக்கு பொற்கொடியும் அடிக்கடி வந்து செல்வார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் சமூகச் செயல்பாடுகளும், பௌத்த பண்பாட்டில் கொண்ட ஈடுபாடும் பொற்கொடியை மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.
20 வயது வித்தியாசம்: தனது தந்தை மூலம் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசி அவரது சம்மதத்தையும் பெற்றார். முதலில் தனது பொது வாழ்க்கையில் உள்ள சவால்களைக் கூறி திருமணத்திற்கு மறுத்த ஆம்ஸ்ட்ராங் பொற்கொடியும் அம்பேத்கர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் என்பதால் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார். 44 வயதில் ஆம்ஸ்ட்ராங்கின் திருமணம் நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங்கிற்கும் பொற்கொடிக்கும் சுமார் 20 வயது வித்தியாசம்:
2016ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி இருவருக்கும் பௌத்த மத வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித சார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தமிழகத்தின் தலித் இயக்கத் தலைவர்களான திருமாவளவன், பூவை. ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கட்சி பணியாற்றிய பொற்கொடி: திருமணத்துக்குப் பின் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெங்களூரில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு அம்பேத்கரின் அரசியல் குருவான சாவித்திரி பாய் பூலேவின் பெயரான “சாவித்ரி பாய்” என்று பெயர் சூட்டினார்.
திருமணமான பிறகு ஆம்ஸ்ட்ராங்குடன் சேர்ந்து பொற்கொடியும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கறிஞர் பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியினர் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், பொற்கொடி, தான் மாநில தலைவராக விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்தே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
R.N.Ravi: தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியின் சர்ச்சைகள்! 2021 - 2026 வரை நடந்தது என்ன? -
மேகதாது அணை.. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் மனு தள்ளுபடியை வெற்றி என கொண்டாடிய சித்தராமையா! -
ஒருபுறம் மழை.. மறுபுறம் வெயில்.. 10 ஆம் தேதி வரை தமிழக வானிலை நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்! -
காமராஜர் ‘கே பிளான்’: திமுக வளர்ச்சியை தடுக்கவா? உட்கட்சி எதிரிகளை ஒடுக்கவா? -
"பயமாக இருக்கு.. எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு சத்தம்!" வளைகுடாவில் சிக்கிய தமிழக மீனவர்கள் கண்ணீர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது?












Click it and Unblock the Notifications