சென்னையில் 3 மணி நேரமாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை.. சில இடங்களில் மின்சார சேவை பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், தலைநகரில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கத்தரி வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று மழை சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

power cut in many places in Chennai, after heavy Rain

அதேபோல தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று மணி நேரமாகக் கோடைமழை பெய்து வருகிறது. அடையாறு, விருகம்பாக்கம், ராயபுரம் ஆலந்தூர், தரமணி, பெருங்களத்தூர், அனகாபுத்தூர், அண்ணா நகர், ஆவடி, குரோம்பேட்டை, அம்பத்தூர், தாம்பரம், போரூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதன் கரணமாகச் சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் மின்சார சேவை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தவிர திருச்சி, சிவகங்கை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+