"ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையலனு நான் ஃபீல் பண்றேன்.." பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்!
கடலூர்: இவ்வளவு ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி அமையவில்லை என்பதை நினைத்து உண்மையாகவே நான் ஃபீல் பண்ணுறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக தவறான கூட்டணியில் இருந்துவிட்டோமோ என்ற எண்ணம் உருவாகிவிட்டதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக முதல்முறையாக இணைந்திருக்கிறது. தேமுதிக தொடங்கப்பட்டு முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள சூழலில், அந்தக் கட்சிக்கு 10 சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட்டது. அதன்படி ராஜ்ய சபா எம்பியாக சுதீஷ் பொறுப்பேற்று கொண்டார்.

அதேபோல் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, உடனடியாக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகவும் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்வது திமுகவினரை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுகவுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் தூள் கிளப்புகிறார்.
அதேபோல் எடப்பாடி பழனிசாமி முன் வைக்கும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். அதிலும் எடப்பாடி பழனிசாமி ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று ஆதாரத்துடன் பிரேமலதா விஜயகாந்த் நிரூபித்துவிட்டார். இது எடப்பாடி பழனிசாமி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடலூரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் பிரேமலதா சந்தித்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திமுக உடன் ஏன் இவ்வளவு நாட்கள் கூட்டணி அமையவில்லை என்று உண்மையாகவே நான் ஃபீல் செய்கிறேன்..
ஒரு தவறான கூட்டணியில் இவ்வளவு நாட்களாக இருந்துவிட்டோமா என்ற எண்ணம் வந்துவிட்டது. கலைஞர் மீது விஜயகாந்துக்கு அவ்வளவு பாசம் உள்ளது. கலைஞருக்கும் உறவு இருந்தது. ஒரு அப்பாயின்ட்மென்ட் கேட்டால், உடனடியாக கொடுப்பார்கள். ஏதாவது ஒரு கோரிக்கை வைத்தால் கூட, உடனடியாக விஜயகாந்துடன் நேரடியாக காலை 6 மணிக்கு பேசக் கூடியவர் கலைஞர்.
இரு தெய்வங்களும் மேல் இருந்து ஆசீர்வாதம் அளிப்பதால் தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது. குடும்ப உறவு இப்போது கூட்டணி உறவாக மாறி இருக்கிறது. விருத்தாசலம் தொகுதியை ஏன் தேர்வு செய்தேன் என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என்று எனக்காக விருப்ப மனு கொடுத்தார்கள். ஆனாலும் விருத்தாசலம் தொகுதியை என் விருப்பத்தாலேயே தேர்வு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
விஜய் பக்கம் திரும்பும் செளராஷ்டிரா வாக்குகள்.. அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி! கள நிலவரம் என்ன? -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
தமிழ்நாட்டிற்கு புதிய துணை முதலமைச்சர்.. அதுவும் எங்கிருந்து தெரியுமா.. பிரபல ஜோதிடர் பகீர் கணிப்பு -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
மதுரை தெற்கை பாஜகவுக்கு கொடுத்தது ஏன்.. டென்ஷனான அதிமுகவினர்.. ராம ஸ்ரீனிவாசனுக்கு புது பிரச்சனை! -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications