Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையலனு நான் ஃபீல் பண்றேன்.." பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இவ்வளவு ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி அமையவில்லை என்பதை நினைத்து உண்மையாகவே நான் ஃபீல் பண்ணுறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக தவறான கூட்டணியில் இருந்துவிட்டோமோ என்ற எண்ணம் உருவாகிவிட்டதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக முதல்முறையாக இணைந்திருக்கிறது. தேமுதிக தொடங்கப்பட்டு முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள சூழலில், அந்தக் கட்சிக்கு 10 சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட்டது. அதன்படி ராஜ்ய சபா எம்பியாக சுதீஷ் பொறுப்பேற்று கொண்டார்.

Premalatha Vijayakanth

அதேபோல் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, உடனடியாக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகவும் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்வது திமுகவினரை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுகவுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் தூள் கிளப்புகிறார்.

அதேபோல் எடப்பாடி பழனிசாமி முன் வைக்கும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். அதிலும் எடப்பாடி பழனிசாமி ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று ஆதாரத்துடன் பிரேமலதா விஜயகாந்த் நிரூபித்துவிட்டார். இது எடப்பாடி பழனிசாமி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடலூரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் பிரேமலதா சந்தித்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திமுக உடன் ஏன் இவ்வளவு நாட்கள் கூட்டணி அமையவில்லை என்று உண்மையாகவே நான் ஃபீல் செய்கிறேன்..

ஒரு தவறான கூட்டணியில் இவ்வளவு நாட்களாக இருந்துவிட்டோமா என்ற எண்ணம் வந்துவிட்டது. கலைஞர் மீது விஜயகாந்துக்கு அவ்வளவு பாசம் உள்ளது. கலைஞருக்கும் உறவு இருந்தது. ஒரு அப்பாயின்ட்மென்ட் கேட்டால், உடனடியாக கொடுப்பார்கள். ஏதாவது ஒரு கோரிக்கை வைத்தால் கூட, உடனடியாக விஜயகாந்துடன் நேரடியாக காலை 6 மணிக்கு பேசக் கூடியவர் கலைஞர்.

இரு தெய்வங்களும் மேல் இருந்து ஆசீர்வாதம் அளிப்பதால் தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது. குடும்ப உறவு இப்போது கூட்டணி உறவாக மாறி இருக்கிறது. விருத்தாசலம் தொகுதியை ஏன் தேர்வு செய்தேன் என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என்று எனக்காக விருப்ப மனு கொடுத்தார்கள். ஆனாலும் விருத்தாசலம் தொகுதியை என் விருப்பத்தாலேயே தேர்வு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+