தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகவே இனி என் வாழ்வு.. பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!
சென்னை: தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்ந நிலையில், தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவப் படம் இன்று திறக்கப்பட்டது. மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் உருவப்படத்தை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளார்.
விஜயகாந்தின் உருவப் படத்தை திறந்து வைத்த பிரேமலதா விஜயகாந்த், பின்னர் அவர் படத்தை நோக்கி கைகூப்பி வணங்கியபடி கண்ணீர் சிந்தினார். படத்திறப்பு நிகழ்வின் போது பிரேமலதாவின் சகோதரரும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளருமான எல்.கே சுதீஷ், விஜயகாந்த்தின் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்.
தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தொண்டர்களை வாழவைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும். இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இதுதான் நம் கோவில். இன்று போடும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை தொடரும். இன்று பலர் அவர் பெயரில் டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள்.
உங்கள் விருப்பப்படி ட்ரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். முதலில், உங்களிடம்தான் இதைக் காட்டுகிறேன். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ர்ஸ்ட்' என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க வேலைகள் அன்றே ஆரம்பித்து விட்டது." எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications