ஈஷாவில் நடந்த மீட்டிங்.. தேர்தல் கூட்டணி குறித்த யூகங்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் சொன்ன விளக்கம்!
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், தமிழ்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவது நல்ல விஷயம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதேசமயம், ஈஷா யோகா மையத்தில் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பிரேமலதா கூறியுள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையக்கூடும் என செய்திகள் பரவி வரும் நிலையில், பிரேமலதா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிக் கணக்கை உறுதி செய்துவிட்டன. ஆனால், தேமுதிக, பாமக ராமதாஸ் அணி, ஓ. பன்னீர்செல்வம் அணி, புதிய தமிழகம் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டுமே கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளன.

தேமுதிகவை பொறுத்தவரை, திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. அதேசமயம், அதிமுக உடனும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு செல்லுமா? இல்லை மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. திமுகவும், அதிமுகவும் தேமுதிக கேட்ட இடங்களுக்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில், 2 நாட்களுக்கு முன்பு கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பிரேமலதா கலந்துகொண்டதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணையக்கூடும் என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ளன. காரணம், கடந்த ஆண்டு நடைபெற்ற ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணியும், அமித்ஷாவும் கலந்துகொண்டே பிறகே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக எந்த அணியில் இணையும் என்பது குறித்து பெரும் விவாதங்கள் நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு மேலும் எதிர்பார்ப்புகளைத் தூண்டியது. இந்த சிவராத்திரி சந்திப்பு கூட்டணி விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "ஈஷாவிடம் இருந்து அழைப்பு வந்ததால் அங்கு சென்றோம். மன நிறைவாக இருந்தது. தேமுதிக கூட்டணி அறிவிப்பு விரைவில் வரும். அதுவரை காத்திருங்கள். கூலாக இருங்கள். யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.
ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அப்படி கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். அவ்வாறு ஒரு வாய்ப்பு வந்தால், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என்று பலமுறை நான் கூறி உள்ளேன்" என அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "ஈஷா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் என அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரதமர் மோடி தமிழகம் வருவது நல்ல விஷயம். அதனால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் நாம் முதலில் அதை வரவேற்போம்" என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி












Click it and Unblock the Notifications