ராமநாதபுரம், பரமகுடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்
சென்னை: ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை காணொளி காட்சி மூலம், பிரதமர் நரேந்தேிர மோடி இன்று திறந்து வைத்தார்.
Recommended Video
ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
கொரோனா பேரிடர் இரண்டாம் அலையின்போது பரவலின்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. அப்போது செயற்கை சுவாசத்திற்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டாவது அலை தாக்கியபோது ஆக்சிஜன் பற்றாக்குறை தான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இது அப்போது ஊடகங்களில் செய்திகளாக வந்த போதிலும் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடைபெற்றதாக ஆவணங்களில் பதிவாகவில்லை என்று நாடாளுமன்றத்தில் பின்னர் தெரிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை போக்க அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், திரவ நிலை ஆக்ஸிஜன் உருளை, ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் நிறுவ மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

அதன்படிபடையில், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்ஸிஜன் உருளை நிறுவப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் சார்பில் ஒரு கோடியே 50 லட்சம் செலவில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.
அதேபோல் பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

முன்னதாக, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் (பொ) காமாட்சி கணேசன் , சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பார்வையிட்டனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications