Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமநாதபுரம், பரமகுடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை காணொளி காட்சி மூலம், பிரதமர் நரேந்தேிர மோடி இன்று திறந்து வைத்தார்.

Recommended Video

    ராமநாதபுரம், பரமகுடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்

    ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

    கொரோனா பேரிடர் இரண்டாம் அலையின்போது பரவலின்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. அப்போது செயற்கை சுவாசத்திற்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியது.

    Prime Minister Narendra Modi today inaugurated the oxygen production plants at Ramanathapuram

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டாவது அலை தாக்கியபோது ஆக்சிஜன் பற்றாக்குறை தான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இது அப்போது ஊடகங்களில் செய்திகளாக வந்த போதிலும் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடைபெற்றதாக ஆவணங்களில் பதிவாகவில்லை என்று நாடாளுமன்றத்தில் பின்னர் தெரிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை போக்க அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், திரவ நிலை ஆக்ஸிஜன் உருளை, ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் நிறுவ மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

    Prime Minister Narendra Modi today inaugurated the oxygen production plants at Ramanathapuram

    அதன்படிபடையில், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்ஸிஜன் உருளை நிறுவப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் சார்பில் ஒரு கோடியே 50 லட்சம் செலவில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.

    அதேபோல் பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

    Prime Minister Narendra Modi today inaugurated the oxygen production plants at Ramanathapuram

    முன்னதாக, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் (பொ) காமாட்சி கணேசன் , சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பார்வையிட்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+