Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடாத கண்டமாக தொடரும் ‘பொங்கல் பரிசு’.. திமுக அமைச்சர்கள் மீதான வழக்கில் ஐகோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோர் மீதான புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,296 கோடியே 88 லட்சம் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வெல்லம், புளி ஆகியவை தரமற்ற பொருட்களாக விநியோகம் செய்ய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

Problem for dmk ministers: Chennai high court order to hear the case against I periyasamy and sakkarapani

இது தொடர்பாக அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூவரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை நிராகரித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் லோக் ஆயுக்தா உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற வகையில் இருந்தன. உயிரிழந்த பூச்சிகள் அதில் காணப்பட்டது. தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. ஏற்கனவே இதுதொடர்பாக முதல்வருக்கு புகார் அளித்தேன்.

அந்த புகாரின் அடிப்படையில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க லோக் அயூதாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+