சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் விலகல்

Google Oneindia Tamil News

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி இருவர் மீதும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகுவதாக ராஜீவ்காந்தி அறிவித்தார்.

Prof. Kalyanasundaram also quit from Naam Tamilar Katchi

பின்னர் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரமும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளதாவது:

Prof. Kalyanasundaram also quit from Naam Tamilar Katchi

(நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு பகிரி வழியாக அனுப்பப்பட்ட எனது கடிதம்) மரியாதைக்குரிய. சீமான் அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி. பொருள் : கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுதல் - குறித்து.

நீ இல்லைன்னாலும் கட்சி இயங்கும்டா- நான் செத்தாதான் நாம் தமிழர் கட்சியை உடைக்கவே முடியும்- சீமான்நீ இல்லைன்னாலும் கட்சி இயங்கும்டா- நான் செத்தாதான் நாம் தமிழர் கட்சியை உடைக்கவே முடியும்- சீமான்

அண்ணா வணக்கம். கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராகவும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இனிமேல் கட்சியில் தொடர முடியாத நிலையிலிருப்பதால், இக்கடிதம் மூலமாக எனது விலகலை அறிவிக்கிறேன்!!

 நான்தான் கட்சி.. நான் இல்லைன்னா கட்சி இல்லைன்னு எவன் நினைக்கிறானோ.. போடா.. சீமான் ஆவேசம் நான்தான் கட்சி.. நான் இல்லைன்னா கட்சி இல்லைன்னு எவன் நினைக்கிறானோ.. போடா.. சீமான் ஆவேசம்

இந்த பயணத்தில் என்னோடு பேரன்போடும், உதவிகரமாகவும் பயணித்த அனைத்து உறவுகள் பொறுப்பாளர்கள் என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும், தங்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிப்பதோடு, எதிர்கால உங்கள் பயணம் பெரு வெற்றியடைய வாழ்த்துகிறேன்!! . இவ்வாறு கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

 நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி விலகல் நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி விலகல்

English summary
Prof. Kalyanasundaram has announced that he will quit from the Naam Tamilar Katchi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X