'ஸ்டெர்லைட்' பாணியில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்- அக்.17-ல் சட்டசபை நோக்கி பேரணி!
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைப் போல பரந்தூர் 2-வது விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 80-வது நாளாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். 100 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் உச்சகட்டமாக ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. 2018-ல் நடந்த இப்போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தமிழகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
தற்போது வடதமிழகத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் 2-புதிய பசுமை விமான நிலையமானது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களுக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்து வருகின்றனர்.
இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் முழுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது பணிகளை முடித்து இரவு நேரங்களில் தொடர்ந்து 80வது நாளாக போராடி வருகின்றனர். அக்கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து ஆதரவு தெரிவிக்க இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசன் ஏகனாபுரத்திற்கு இன்று வருகை தந்தார்.
ஏகனாபுரம் பகுதி மக்களிடையே கருத்துக்களை கேட்க ஏற்கனவே அதிமுக , நாம் தமிழர் கட்சி ,பாட்டாளி மக்கள் கட்சி , விசிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வருகை தந்திருந்தனர். அறவழியில் தொடர்ந்து போராடிவரும் அக்கிராம மக்களிடம் கொட்டும் கன மழையினிலும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் தமிழரசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக வருகின்ற 17-ந் தேதி அன்று 13 கிராம மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து பேரணியாக சட்டசபை நோக்கி செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications