"முடிஞ்சா தொட்டுப்பார்".. ஏன்? பயமா? இந்த தலைக்கனம் வேணாம்.. திமுக எம்பியை சீண்டிய பாஜக நாராயணன்
பாஜக நாராயணன் திருப்பதி, ட்வீட் போட்டு திமுக எம்பியை விமர்சித்துள்ளார்
சென்னை: பாஜக நாராயணனுக்கும், திமுக எம்பி செந்தில்குமாருக்கும் ட்விட்டர் போர் வலுத்து வந்த நிலையில், மீண்டும் சீண்டி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.
இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, சுப்ரீம்கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் எம்பி வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, "நீங்கள் மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்கவேண்டாம். நாங்கள் பேசாமல் இருப்பதால் நீங்கள் சொல்வதை எல்லாம் அறியாமல் இருக்கிறோம் என்று மட்டும் நினைக்காதீர்கள்... நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள்" என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.

ஆமாம்.. சமூக நீதி
இதற்கு திமுக தரப்பில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.. நீதிமன்றத்தின் கருத்துக்கு பலரும் திரண்டு வந்து சோஷியல் மீடியாவில் நேற்று முதல் பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. அந்தவகையில், திமுக எம்பி டாக்டர் செந்தில் குமாரும், தன் தரப்பில் ஒரு பதிலடியை தந்தார்.. அது தொடர்பாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டார்.. அதில், "ஆமாம்.. #சமூக_நீதி ஆட்சி மூலம் இதை சாதித்து, தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன doubt. My UnLords"..

"My UnLords"
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்.. உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முற்பட்ட வகுப்பை சேர்ந்த பிரிவினர்தான்.. அப்படி செய்தவரை இது போன்ற கமெண்ட்கள்தான் வரும். சமூக நீதிக்கும், மக்கள் நல்திட்டங்களுக்கும் எதிரான கருத்துக்கள்தான் வரும். இந்தியாவின் முதல் எஸ்.சி, ஓ.பி.சி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வந்தார்கள். அதற்கு கருணாநிதிதான் காரணம்" என்றும் செந்தில் குமார் குறிப்பிட்டார்.

Bring it on
இது தமிழக பாஜகவை மேலும் கொந்தளிக்க வைத்தது.. பாஜகவின் துணை பொதுச்செயலாளர் நாராயண் திருப்பதி இதற்கு பதிலடி தந்தார்.. "நீதிபதிகள் பற்றி கமெண்ட் செய்வது என்று மிகப்பெரிய குற்றம். இந்த எம்பி தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் பற்றி சாதீய ரீதியாக கருத்து சொல்லி இருக்கிறார். அவரின் இகழ்ச்சியான கருத்துக்களுக்கு தண்டிக்கப்பட வேண்டும்" என்று காட்டமாக பதிவிட்டார்.. உடனே இதற்கு, செந்தில்குமார் திருப்பி பதிலடி தந்தார். "போங்க.. Bring it on. .. முடிஞ்சா தொட்டு பார்(ங்க)" என்று சவால் விட்டு ட்வீட் போட்டிருந்தார்.. இப்படி இரு தரப்பு ட்வீட்களுக்குமே பாஜகவினரும், திமுகவினரும் திரண்டு வந்து மாறி மாறி கமெண்ட்களை பதிவிட்டும், ஒருவரையொருவர் சாடியும் வந்தனர்.

"முடிஞ்சா தொட்டுப்பாரு"
இந்நிலையில், எம்பி செந்தில்குமார் அந்த ட்வீட்களை எல்லாம் நீக்கிவிட்டதாக தெரிகிறது.. உடனே இதையும் ஒரு ட்வீட்டாக பதிவிட்டு, செந்தில்குமாரை சீண்டி கேள்வி எழுப்பி உள்ளார் நாராயணன்.. அதில், "'முடிஞ்சா தொட்டு பார்' என்று சவால் விட்டு விட்டு பதிவிட்ட ட்வீட்டை நீக்கி விட்டீர்களே? ஏன்? பயமா? சவாலில் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்கிறீர்களா? தலைக்கனம் தவிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் டாக்டர் செந்தில்குமார் அவர்களே!" என்று பதிவிட்டுள்ளார். இதற்கும் திமுகவினர் கிளம்பி வந்து நாராயணன் ட்வீட்டுக்கு பதில் தந்து கொண்டிருக்கிறார்கள்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications