கருணாநிதி பேனா நினைவு சின்னம்.. ஜன.31ல் மக்களிடம் கருத்துக்கேட்பு.. ஆர்வம் காட்டும் திமுக!
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின், மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ள நிலையில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஜனவரி 31ம் தேதி பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின், மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை மெரினா கடலில் 8,551.13 சதுர மீட்டரில் 42 மீட்டர் உயரத்துக்கு கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி மெரினா கடற்கரை ஒட்டிய வங்க கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைத்தல் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் திட்டத்திற்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் அதன் செயல்முறை திட்ட சுருக்கம் வரைவு சாத்திய அபாயங்களின் மதிப்பீடு ஆய்வு , பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசரகால செயல் திட்டங்கள், அவசரகால மீட்பு திட்டம் குறித்த அறிக்கை ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காகவும் ஆய்வுக்காகவும் வைத்திட வகை செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் பொறுப்பாளர் பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் செயலாண்மை திட்டத்தின் செயல் விளக்கம் குறித்த விளக்கத்துடன் விரிவாக விவரிப்பார். பொதுமக்கள் கருத்து கேட்புணர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெற வாய்ப்பு அளிக்கும் வகையில் திட்டத்தின் பொறுப்பாளர்களால் ஆவன செய்யப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் மதிப்புரைகள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அமைய உள்ள இடம், இத்திட்டத்தால் இடப்பெயரக் வேண்டிய இடங்கள் மற்றும் திட்டத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்ற இடங்களில் வாழும் மக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் அனைவரும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்று திட்டம் பற்றி கருத்துக்களை வாய் மொழியாகவும், எழுத்து வடிவிலோ தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications