Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் வாக்குப்பதிவு LIVE: காலை முதலே ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களிக்கும் பொதுமக்கள்!

Live
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 3 மாநிலங்களில் மொத்தம் 296 தொகுதிகள் உள்ள நிலையில் சுமார் 1800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்க 6.1 கோடி வாக்காளர்கள் இந்த 3 மாநிலங்களில் வாக்களிக்கத் தயாராக உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. கேரளாவில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்- என்டிஏ மற்றும் காங்கிரஸ்- திமுக, அசாமில் பாஜக- காங்கிரஸ் இடையே பிரதான போட்டி இருக்கிறது. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தல் முடிவுகளோடு எண்ணப்படும்.

Puducherry Election 2026  Puducherry  Assembly Election                                                       2026                                                                                 Other Tags

Apr 09, 2026, 7:37 am IST

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, குருவாயூர் தெற்கு பகுதியில் உள்ள குருவாயூரில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் ல் தனது வாக்கை செலுத்தினார்.
Apr 09, 2026, 7:24 am IST

அசாமில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். பல இடங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று வாக்களிப்பதைப் பார்க்க முடிகிறது.
Apr 09, 2026, 7:15 am IST

கேரளாவில் காலையிலேயே ஜனநாயக கடமை ஆற்ற நடிகர் மோகன் லால் வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் நிற்கிறார்.
Apr 09, 2026, 7:03 am IST

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது

3 மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது

காலை முதலே 3 மாநிலங்களிலும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்
Apr 09, 2026, 6:56 am IST

இன்று புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சுமுகமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Apr 09, 2026, 6:52 am IST

அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களை கண்காணிப்பதற்காக 23 நாடுகளிலிருந்து 43 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு வந்துள்ளது. இக்குழுவில் ஐந்து வெளிநாட்டுத் தூதரகங்களின் உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.
Apr 09, 2026, 6:52 am IST

புதுச்சேரி, கேரளா, அசாமில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்

அசாமில் 126 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+