சித்தப்பாவை முதல்வராக்க கோடிகளுடன் சோபா அனுப்புவாரே புஷ்பா... திடீரென தேடும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புஷ்பா பாகம் 2 படத்தில் புஷ்பராஜாக வரும் அல்லு அர்ஜூன் மாஸ் ஹீரோவாக நடித்திருப்பார். தன்னுடன் இருக்கும் சித்தப்பா ராவ் ரமேஷை முதல்வராக்க பலருக்கும் கோடிகளை புதிய சோபாவில் வைத்து அல்லு அர்ஜூன் கொடுப்பார். அந்த படத்தில் மத்திய அமைச்சராக வரும் ஜெகபதி பாபு மற்றும் அவரது தம்பி ஆகிய இருவருக்குமே அடுத்தடுத்து புதிய ஷோபாக்களை அனுப்புவார்.

இதனை ஒப்பிட்டு முதல்வர் விஜய் அரசியலை சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் விஜய் போகும் முன்பு புதிய ஷோபா போனது ஏன் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

அதிகாரத்தை கைக்கு வரவழைக்க பணம் தான் தேவை என்பதாக புஷ்பா 2 படம் இருக்கும். புஷ்பா 2 படத்தில் செம்மரக்கடத்தல் மன்னாக புஷ்பாராஜ் என்ற கேரக்டரில் அல்லு அர்ஜூன் நடித்திருப்பார். அதில் தன்னுடன் புகைப்படம் எடுக்க மறுத்த முதல்வரை பழிவாங்க விரும்புவார் அல்லு அர்ஜூன், அவரை மாற்றுவதற்காக அதிரடியான வேலைகளை செய்வார்..

அதன்படி தன்னுடன் இருக்கும் சித்தப்பா என்பவரை ஆந்திராவின் முதல்வராக்க விரும்புவார். அதற்காக எம்எல்ஏக்களுக்கு புதிய சோபாவில் பணம் அனுப்புவார்.

Pushparaj vs Vijay what the Pushpa movie shows about sofa Scene explanation

உச்சபட்சமாக மத்திய அமைச்சராக இருக்கும் ஜெகபதி பாபு மற்றும் அவரது தம்பிக்கும் பல கோடி பணம் அனுப்புவார்.. அப்போது ஜெகபதி பாபு (வீரபிரதாப் ரெட்டியாக நடித்திருப்பார்) , அல்லு அர்ஜுனிடம், பணத்தை கையில் தூக்கியபடி, சரி உனக்கு என்ன வேண்டும்.. சுரங்கம் டெண்டரா அல்லது என்ன டெண்டர் வேண்டும் என்று கேட்பார்.

அதற்கு அல்லு அர்ஜுன், எனக்கு மொத்த மாநிலமும் வேண்டும்.. என் சித்தப்பா முதல்வராக வேண்டும் என்பார். திருப்பதி லட்டு போல் பிரசாதமாக வாங்கி கொள்ளுங்கள்.. திரும்ப கேட்க மாட்டேன்.. மறுத்தால் என்னிடம் நிறைய ஷோபா இதேபோல் இருக்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டல் தொனியில் பேசுவார்..

இந்த சீனை விவரித்து தான் பலர் புஷ்பா பட பாணியில் முதல்வராகி உள்ளார் விஜய் என்று விமர்சிக்கிறார்கள். ஏனெனில் விசிக தலைவர் திருமாவளவன் அலுவலகம், சிவி சண்முகம் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து விஜய் வருவதற்கு முன்பு புதிய சோபா சென்றது. இதுதான் விமர்சனங்களுக்கு காரணமானது..

ஆனால் புஷ்பா 2 படத்தில் உள்ளது போல் உண்மையில் நடக்கவில்லை.. அந்த ஷோபாவில் பணம் அனுப்பப்படவில்லை. அப்புறம் ஏன் சோபா அனுப்பப்பட்டது..பொதுவாக கட்சி அலுவலகங்களில் சாதாரண சேர்களே இருக்கும். முதல்வரே வரும் போது, அவர் வரும் போது, மரியாதைக்காக அந்த கட்சி தலைவர்களே புதிய சோபாக்களை வாங்கி அங்கு வைத்துள்ளார்கள். 'இதுதான் உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மற்றபடி புஷ்பா பட பாணியில் எல்லாம் செய்தால், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அடுத்த நொடி கண்டுபிடித்துவிடும். அதுமட்டுமல்ல.. பணம் கொடுக்கிறார்கள் என்றால் எந்த கட்சியும் இப்படி வெளிப்படையாக கொடுக்க மாட்டார்கள்.. வாங்கவும் மாட்டார்கள். அப்படி கொடுத்தாலும் சரி, வாங்கினாலும் சரி மாட்டிக் கொள்வார்கள்..

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் புஷ்பா பட பாணியில் சோபா போனது என்று விமர்சனத்தை முன்வைத்தார். அதன்பின்னரே பலரும் புஷ்பா படத்தில் சோபா சீனை தேடி பார்த்து வருகிறார்கள். அது நெட்பிளிக்ஸில் உள்ளது. யூடியூப்பில் தெலுங்கில் மட்டும் தான் உள்ளது. நெட்பிளிக்ஸில் மட்டுமே தமிழில் பார்க்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+