மொத்தமாக கிளம்பிய மக்கள்.. சென்னை பெருங்களத்தூர் ஸ்தம்பித்தது.. கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: காலாண்டு விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர் செல்ல குவிந்த காரணத்தால் சென்னை பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் முதல் வண்டலூர் வரை ஒன்றரை கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
செப்டம்பர் 28ம் தேதி மிலாடி நபி, அதற்கு அடுத்தாக சனி மற்றும் ஞாயிறு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் மெட்ரிகுலேசன்பள்ளிகளுக்கு கடந்த 24ம் தேதியில் இருந்தே விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு (புதன்கிழமை) புறப்பட்டனர். இதேபோல் ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பல ஆம்னி பேருந்துகள் முழு வீச்சில் இயங்கின.
சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி. நெல்லை என தமிழ்நாட்டின் 90 சதவீதம் ஊர்களின் மக்கள் சென்னையில் இருந்து அவர்களின் ஊருக்கு செல்ல பெருங்களத்தூர் வண்டலூர் செங்கல்பட்டு வழியாகவே செல்கிறார்கள்.
இந்த சூழலில் ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து பல்லாயிரம் பேர் ஒரே நேரத்தில் கார்கள், பேருந்துகள், பைக்குகள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் கிளம்பினார்கள். சென்னையில் இருந்து எல்லா வாகனங்களும் பெருங்களத்தூரை தாண்டித்தான்3 போக வேண்டும் என்பதால், தாங்க முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது.
பெருங்களத்தூரின் தொடக்கம் வண்டலூர் வரை நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.ஒருபக்கம் பேருந்து நிறுத்தம் என்பதால் அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரு பாதையில் நின்றன.மறுபாதையில் தனியார் வாகனங்களும் சென்று முன்பாக போய் நின்று ஆட்களை ஏற்றிச்சென்றன. இது காரணங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதேநேரம் பெருங்களத்தூரில் நடைபெறும் மேம்பால பணியும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்தது.
சென்னை பெருங்களத்தூரில் ஒரே நேரத்தில் எல்லா வாகனங்கள் சந்திக்கும் நிலையில், அங்கு உள்ள சிக்னலும் நெரிசலை அதிகப்படுத்தியது. இதனால் பெருங்களத்தூர் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதேபோல் அதிகப்படியான வாகன நெருக்கம் காரணமாக பரனூர் சுங்கச்சாவடி பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications