7 தமிழர் விடுதலை.. மாவோயிஸ்டுகள் திடீர் ஆதரவுக் குரல்.. பின்னணியில் யார்?
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யாமல் இருக்க மாவோயிஸ்டுகள் ஆதரவு என்கிற பெயரில் திடீரென ஒரு நாடகம் அரங்கேற்றப்படுவதாக தமிழார்வலர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
உச்சநீதிமன்றமே 7 தமிழரை விடுதலை செய்வதை மாநில அரசு முடிவு செய்யலாம் என கூறியது. இதையடுத்து தமிழக அரசும் அமைச்சரவையை கூட்டி 7 தமிழரை விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். இதனைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

டெல்லி பயணம்
இருப்பினும் ஆளுநர் தரப்பில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

மாவோயிஸ்டுகல் ஆதரவு
இச்சந்திப்பு தொடர்பாக ஊடகங்கள் செய்திகள் வெளியான அதே நேரத்தில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி மாவோயிஸ்டுகள் துண்டு பிரசுரம் கொடுத்தனர் என்றும் அவர்களது பேட்டியையும் சில ஊடகங்கள் திடீரென முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

அரசியல் முத்திரை?
7 தமிழர் பிரச்சனையை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையிலான போராட்டக் குழுதான் முன்னெடுத்து வருகிறது. இதில் அரசியல் சார்பு இருக்கக் கூடாது என்பதில் அந்த இயக்கங்கள் உறுதியாக உள்ளன. இந்த நிலையில் திடீரென மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் துண்டு பிரசுரம் கொடுப்பதாகவும் அதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதும் ஏன் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.

தூத்துக்குடியில் 13 பேர் பலி
7 தமிழருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி அவர்களை விடுதலை செய்யாமல் தடுப்பதற்கான சதியா இது என்றும் தமிழார்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவிகள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். கடைசியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக கூறப்பட்டது. ரஜினி உள்ளிட்டோரும் அதை ஆமாம் ஆமாம் என்று ஆமோதித்தனர். இப்போதும் அதேபோல் மாவோயிஸ்டுகளின் பெயரால் 7 தமிழரை விடுதலை செய்யாமல் தடுக்க சதி நடைபெறுகிறதா? என்பதுதான் தமிழார்வலர்களின் கேள்வி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications