Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. கேழ்வரகு இனி ரேஷனில்! மத்திய அரசின் அறிவிப்பால் இனி கவலை இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு விநியோகிக்கப்படுவதால், ஏழை எளிய குடும்பங்களுக்குக் குறைந்த விலையில் சத்தான உணவு கிடைப்பது சாத்தியமாகி வருகிறது.. முக்கியமாக, குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இதன் மூலம் எளிதாக சென்றடைகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கேழ்வரகு கொள்முதல் குறித்து மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.. அது என்ன தெரியுமா?

தற்போதைய சூழலில், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு மக்களிடையே வெகுவாக அதிகரித்து வருகிறது.

TN Ration shop

கேழ்வரகு - ரேஷன் கடைகள்

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ராணுவ வீரர்களின் உணவுப் பட்டியலிலும் சிறுதானியங்களை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ராணுவ வீரர்களுக்கான உணவில் சிறுதானியங்களை, மத்திய அரசு சேர்த்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் ரேஷன் கடைகள் வழியாக மக்களுக்குக் கேழ்வரகு வழங்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த 3 வருடங்களில் மட்டும் 3,578 விவசாயிகளிடமிருந்து 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் தெரிவித்திருந்தார்..

உணவுத்துறை அமைச்சர்

இது சம்பந்தமாக ஒரு விளக்கமும் தந்திருந்தார்.. அதில், "2022-2023 பருவத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெறும் 514 மெட்ரிக் டன்னுடன் தொடங்கிய இத்திட்டம், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு கடந்த ஆண்டில் 4,050 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது.

நடப்பு 2025-2026 கொள்முதல் பருவத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 6,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்காக நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டை விட மெட்ரிக் டன்னிற்கு ரூ. 5,960 உயர்த்தி, ஒரு மெட்ரிக் டன் ரூ. 48,860 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலையேற்றத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய வேண்டும்" என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்..

தமிழக விவசாயிகள் - விளைச்சல்

ஆனால், தமிழக விவசாயிகளிடம் இருந்து, கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கான அவகாசம் இந்த மாதம் முடிவடைகிறது.. இந்த கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் வரை, மத்திய அரசு நீட்டித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழக விவசாயிகளிடம் இருந்து, 2025 நவம்பர் 1ல் துவங்கி, இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நடப்பு பருவத்தில், 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, தமிழக அரசு வாணிப கழகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு தந்த குட்நியூஸ்

இதற்காக விவசாயிகளுக்கு, ஒரு டன் கேழ்வரகுக்கு, 48,860 ரூபாயை, குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்குகிறது. கேழ்வரகு விளைச்சல் அதிகம் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில், நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்கி, விவசாயிகளிடம் இருந்து, வாணிப கழகம் கேழ்வரகை கொள்முதல் செய்கிறது. நடப்பு பருவத்தில் இதுவரை, 965 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கான அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு, வாணிப கழகம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று, கேழ்வரகு கொள்முதலுக்கான அவகாசம், வரும் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அறுவடை தாமதமான விவசாயிகளும் அவசரமின்றி தங்கள் விளைச்சலை அரசு மையங்களில் ஒப்படைத்து முழுமையான பலனை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது... மேலும் இதில் புரோக்கர்கள் தலையீடும் இருக்காது... பணமும் நேரடியாக விவசாயிகளின் கைக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+