குட்நியூஸ்.. திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு! ரயில்வே வாரியம் ஒப்புதல்
சென்னை: 4 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு திருவனந்தபுரம்-மதுரை இடையே இயங்கும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இருமார்க்கமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தமிழ்நாட்டின் மதுரைக்கு அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டிஎண் 16343/16343)இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் கேரளா, தமிழ்நாடு மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.50 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 4.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் கொல்லம், சங்கனாச்சாரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவாக, திரிச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல் வழியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதுதொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால் ஒப்புதல் என்பது கிடைக்கவில்லை. ரயில்வே பெட்டிகளை சுத்தம் செய்வது, பாம்பன் பாலத்தில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் இருக்கும் சிக்கல் உள்ளிட்டவை தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தான் திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இருப்பினும் தற்போது ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வேலை நடக்கிறது. இந்த பணிகள் டிசம்பர் மாதம் வரை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இதனால் முதற்கட்டமாக இந்த அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட வாய்ப்புள்ளது. பாலப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு முழுவதுமாக இயக்கப்பட உள்ளது.
மேலும் இந்த ரயில் சேவை நீட்டிப்பு குறித்து ரயில்வே வாரியம் இப்போது தான் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இந்த ரயில் சேவை நீட்டிப்பை வரும் நாட்களில் அமலுக்கு கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications