Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில்.. இன்று இரவு மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். 29 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும். ஜனவரி 28 முதல் 31ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain Alert Till 7 PM for Chennai and 11 Other Districts

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கிலிருந்து வரும் வளிமண்டல காற்றலை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜனவரி 26) உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28 முதல் 31 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்டி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலா 4 செமீ, சென்னை சோழிங்கநல்லூர், உத்தண்டி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+