Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை, காஞ்சிபுரம் உட்பட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rainfall is likely in the coastal districts of Tamil Nadu for the next two days

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 4 செ.மீ.மழை மழை பதிவாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கொல்லிடம் ஆனைக்காரன் சத்திரம் ஆகிய பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழை மழை பதிவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசில் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+